Friday, August 15, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 5

(சைவ ஜோக் தான்)
டைரக்டர் ; ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..
நடிகை ; சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைர"டக்கர்" ; ??????????????????????
...............................
காதலி.. செல் பேசியில் காதலனுடன் உரையாடுகிறாள்..

அன்பே.. ராத்திரி பூரா என் கனவுலே நீங்க வந்து கலக்கினீங்க..
உங்க நினைப்புதான் போங்க..அப்புறம் இன்னைக்கு நாம திட்டம் போட்ட மாதிரி சந்திக்க முடியாது..எங்கம்மா என்னை டாக்டர் கிட்டே அழைச்சுட்டு போறாங்க.. ஏனா..? பாதி ராத்திரியிலே பிசாசைக் கண்ட மாதிரி கத்துறேனாம்..வச்சுடவா.?!!!!!!!!!
.................................
சர்தார் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விழா.
தலைமை ஏற்ற மந்திரி இவ்வாறு உரையாற்றினார்..
" நம்ம இந்தியாவிலே எங்கேயோ ஒரு பொம்பள 10 வினாடிக்கு 1 பிள்ளை வீதம் பெத்துக்கிட்டு இருக்கா".
வெகுண்டெழுந்த சர்தார் கத்தினார்.."மந்திரி அய்யா, அவளை உடனே கண்டுபிடிச்சு புள்ள பெக்குறதை நிறுத்தச் சொல்லுங்க..!".
..........................
(சைவ ஜோக் தான்)
ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?
__________________
(சைவ ஜோக் தான்)
மூணு குடிகாரப்பசங்க பேசிக்கிட்டு இருந்தானுவ. ரெண்டு பயக தாம் பொண்டாட்டியள எப்புடி எப்புடியோ ஆட்டி படப்போமுண்டு ஏகடியம் பண்ணி சிரிச்சானுவ. ஒத்தம் மட்டும் கமுக்கமா இருந்தாம்.
ரவுசுக்காரனுவ இவனயும் கேட்டானுவ..அவம் சொன்னாம்..போங்கடா
பொச கெட்ட பயலுவளா..எம்பொண்டாட்டி நேத்தைக்கு கூட எங்கிட்டெ மண்டி போட்டுக்கிட்டு என்ன சொன்னா தெரியுமாலே ன்னான்.
இவிங்கே அசந்து போயி, " என்னலே சொன்னா" ன்னு ஆர்வமா கேட்டாம்..
அவம் சொன்னானாம்.." ஏம்யா கட்டிலுக்கு கீழே போய் ஃளிஞ்சுக்கிட்டீரு.? ஆம்பளயா வெளியே வந்து சண்ட போடும்யா" ன்னா. நாம் விடல்லியே..விடியற வரைக்கும் அப்பிடியே அவள கத்த விட்ட்னாக்கும் ன்னானாம்.
..........................
வெற்றிகரமான கணவன் யார்?
தன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் சம்பாதிப்பவன்..!
வெற்றிகரமான மனைவி ??
அப்படி ஒரு மனிதனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்பவள்..!!

2) கணவன்.. தனக்கு தேவைப்படும் 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்கும் முட்டாள்.
மனைவி.... தனக்கு தேவைப்படாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்கும் அதி புத்திசாலி.!

3) நல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..!
நல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..!!
.............................
சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இரு லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..

மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.

கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!
................................
தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...

மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது..!
.........................................
ஒருவர் தாங்க முடியாத வயிற்றுவலியில் துடித்தபடி மருத்துவரிடம் சென்றார்..
மருத்துவர் சிறிய கைவிளக்கு கொண்டு அவர் வாய்க்குள் பரிசோதித்தார்.. பின் மூக்கு, காது எல்லாவற்றையும் விளக்கு அடித்துப் பார்த்துவிட்டு திருப்தியுடன் தலையசைத்தபடி சொன்னார்.. பேட்டரி நல்லா இருக்கு..!!!
.....................

ஒரு முறை சர்வதேச வழக்கறிஞர் மாநாட்டுக்கு சென்ற விமானம் கடத்தப்பட்டது. கடத்தல்காரனின் மிரட்டலுக்கு பணிந்து அரசு அவன் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

அவன் மிரட்டல் என்ன தெரியுமா..?

எனது கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் 1 மணி நேரத்துக்கு 1 வழக்கறிஞர் வீதம் விடுதலை செய்வேன்....!!!!
.......................
சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் விளையாடிக்கிட்டு இருந்த்ததைப் பார்த்துட்டேன்

சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!
.....................
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும். மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.c.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள் என்று...!!!
...........................
old.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்
.................

0 comments:

Post a Comment