Friday, June 27, 2008

Great Indian Products

Some of indian product names alike world brands. Just for Fun






எனது நன்றி துரைமுருகனுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பியதற்காக

A Funny Joke

A MBA and a BE student go on a camping trip, set up their tent ,and fell asleep.
Some hours later, the MBA wakes his BE friend and says
"Look up at the sky and tell me what you see."
The BE replies, "I see millions of stars."
The MBA asks, "What does that tell you?"


The BE ponders for a minute.
"Astronomically speaking, it tells me that there are millions of galaxies
and potentially billions of planets.
Astrologically, it tells me that Saturn is in Leo.
Time wise, it appears to be approximately a quarter past three.
Theologically, it's evident the Lord is all-powerful and
we are small and insignificant.
Meteorologically, it seems we will have a beautiful day tomorrow.
What does it tell you?"

The MBA is silent for a moment, then speaks.

*

*

*

*

*

*


"Practically. ..Someone has stolen our tent".

Monday, June 23, 2008

How to Make Popcorn using Mobile Phones

Friday, June 20, 2008

இப்போதைய நிலைமை


வானில்லைய தெரிச்சுகனுமுல


Monday, June 16, 2008

காசு சேர்ப்பது எப்படி??

Only for guys

1. பசி எடுத்தாலோ அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ
கம்பெனிக்கு ஆள் தேடாமல் தனியாக போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.

2. மாதம் 5 லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடாதீர்கள். 5*60 = 300
கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் (அது உங்கள் சொந்த வேலையாக
இல்லாத பட்சத்தில்) கம்பெனியில் பெட்ரோல் க்ளைம் கேட்டு வாங்குங்கள்.

3. சினிமா, ஷாப்பிங், பொருட்காட்சி, வேறு ஏதேனும் ஷோக்கள் எதுவாயினும்
மாதத்திற்கு ஒன்றுதான் எனத் தீர்மானியுங்கள். திராபை படங்களுக்கும் பத்து
இருபது பேரை இழுத்துச் செல்லாதீர்கள்.

4. வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார்
செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம்
நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.

5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம்
சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.

6. பையில் 200 ரூபாய்க்கு மேல் வைத்து பழகாதீர்கள்.

7. மலிவாக கிடைக்கிறதே என தேவையில்லாததை வாங்காதீர்கள். பிறகு தேவையுள்ளதை
வாங்க பணம் இருக்காது.

8. நாய் பழக்கம் வேட்டியை கிழிக்கும் என்பார்கள். பெண்களுடான பழக்கம் பர்ஸை
பதம் பார்க்கும். கூடுமானவரை ‘கேர்ள் பிரண்டோடு’ ஊர் சுற்றுவதை தவிர்க்கவும்.
முடியாத பட்சம் அவளிடம் ஜபர்தஸ்த் காட்டாமலாவது இருக்க வேண்டும்.

9. சுயமாக முகச்சவரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

10. வண்டி, செல்போன், இரவல் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிருங்கள்.

11. இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். இது பல்வேறு வழிகளில்
உங்களுக்கு உதவும்.

12. உங்கள் துணிகளை நீங்களே துவையுங்கள்.

13. கிரெடிட் கார்டு இருந்தால் இரண்டாக வெட்டி எந்த வங்கியில் வாங்கினீர்களோ
அந்த வங்கிகே திருப்பி அனுப்புங்கள்.

14. மச்சான் ஒரு சிகரெட் வாங்கிகொடுறா, ஒரு காபி சொல்லு மாதிரி சில்லறை
கேஸ்களின் சகவாசத்தை ஒழியுங்கள்

Friday, June 13, 2008

சென்னை சூப்பர் கிங்

அன்புள்ள சிம்புதேவனுக்கு

To Read above picture Kindly click on it

How people give explanations!!!!!!!!


Suddenly one of the employees in an organization took
10 days Leave Without any notice.

When he returned his PL asked for explanation.
The employee said "Sir, my mom died unexpectedly".

The PL let it go at that.
After 3 months the same pattern repeated,
and this time the said his Father died.
Then the PL got changed.

After 3 months the same pattern repeated.
And the employee gave the explanation that his mom died.
After 3 months same thing again...
And this time his father died.

This Happened repeatedly for 2 years.
At the end, one PL checked his past
Records and told him, "I have caught you red handed,
How come in the Past 2 years,
your mom has died 5 times,
and your dad has died five Times?"

NOW GUESS THE ANSWER...

To which the guy said,
"Sir, my mom died and my father remarried.
Then my father died and my new mom remarried.
Then my mom died and the new Father remarried.
This has been going on and on and on and..."


Thursday, June 05, 2008

Oh God__Two suicides at a time!!!

Wednesday, June 04, 2008

எல்லாம் ஒரு பொது அறிவுதாண்டே.. ஹி!!ஹி!!"

"அண்ணாச்சி! எப்படி இருக்கிய?"

"வாலே மக்கா!! நல்லாத்தான் இருக்கேன்"

"அண்ணாச்சி.. இந்தக் கடற்கரை காவல்படைல ஒரு அம்மா வேலை பார்த்தாவல்லா.."

"யாருலே அது? நம்மூருல ஏது கடற்கரை காவல்படை?"

"அட நீங்க வேற அண்ணாச்சி!! நான் சொல்லுதது டீவில் காட்டுவாங்க்ள்லா "

"எலே அதுல இங்கிலீசுலல்லா பேசுவாவ"

"சர்தான் போங்க. அவுங்க பேசுததை கேக்கவா அதைப் பாக்கோம். ஏதோ சீமைக்காரிய துணிப்பஞ்சத்துல இருக்காவளேன்னு அனுதாபத்துல பாக்கோம்"

"அது சரி. உன் அனுதாபத்தை பழனிவேல் ராஜா கேட்டாரு. சரி இப்ப அதுக்கென்னங்கேன்?"

"இல்ல. அதுல பிரமிளான்னு ஒரு அம்மா நடிக்கும்லா"

"சவத்து மூதி. அது பிரமிளா இல்லலே. பமீலா"

"என்ன எழவோ, பேரா நமக்கு முக்கியம்?"

"அதுசரி. இப்ப என்னத்துக்கு அவளப் பத்தி அக்கறையா விசாரிக்க?"

"இல்ல அந்தம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாவளாமே அப்படியா?"

"ஏன் நீ கட்டிக்கலாம்னு இருந்தியாக்கும்?"

"சும்மா கிண்டல் பண்ணாதீய அண்ணாச்சி. நெசமாத்தானா?"

"ஆமாலே. என்னமோ இன்னைக்குத்தான் புதுசா கல்யாணம் பண்ணிக்குற மாதிரி சொல்லுத. அந்தம்மாவுக்கு இப்ப இதெல்லாம் ரொம்பப் பழக்கமாப் போச்சு. இது மூணாவது கல்யாணம்"

"அப்ப மொத ரெண்டு பேரு..?"

"லீன்னு ஒரு ஆள் கூட மூணு வருசம் இருந்திருக்காங்க.அதுல ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. அப்புறம் 2006ல நாலு மாசம் இன்னொருத்தர் கூட இருந்துட்டு 'போதும்'னு போயிட்டாங்களாம்"

"சரி. இப்ப இந்தம்மாவை யாரு கட்டியிருக்கா?"

"ஒருத்தி இருக்காள்லாடே பாரிஸ் ஹில்டன்னு. அவ கூட ஒரு 'மேப்படி' படத்துல நடிச்ச பய ஒருத்தன் இருக்கான் சாலமன் அப்ப்டின்னு. அவனத்தான் கட்டிக்கிட்டாக"

"அதுசரி. இவுகளும் அப்படி படத்துல நடிச்சவுகதானே?"

"அதனால என்னடே?! உன்ன மாதிரி வாய்க்குள்ள என்ன போவுதுனே தெரியாம வாயத் தொறந்து அவுகளைப் பாக்க ஆளிருக்க வரைக்கும் அவுக இஷ்டத்துக்கு ஆடுவாக"

"என்னப் பத்தி அப்படிச்சொல்லிட்டு விலாவாரியா நீங்க மட்டும் எல்லா வெவரமும் அவளப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிய?"

"எல்லாம் ஒரு பொது அறிவுதாண்டே.. ஹி!!ஹி!!"

இந்தக் கதயக் கேட்டியளா அண்ணாச்சி....................

ரொம்ப நாளாச்சுல்லா மக்கா கதயச் சொல்லி. அதான் இன்னைக்கு ஒரு கத சொல்லலாம்னு பாக்கேன். 'ஒரே கதயவே திரும்பத் திரும்ப அப்படியும் இப்படியுமா விட்டுட்டு இருக்கீரே தவிர என்னைககாவது நல்லதா ஒரு கத சொல்லுதீராவே கூறுகெட்ட கூகை'ன்னு சேக்காளி ஒருத்தன் துப்பாத கொறயா சொல்லிட்டுப் போயிட்டான் பாத்துக்கிடுங்க. அதான் 'சரிடே!'ன்னு மக்களுக்கு நாம ஒரு கதயச் சொல்லிடலாமேன்னு பாக்கேன்

ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்திருக்கான். (யாருலே அவன் ஒரு ஊருல ஒரு வியாபாரிதான் இருப்பானான்னு கோட்டித்தனமா கொரல் விடுதது??) அவன் அந்த ஊரு சனங்களைப் பார்த்து' மக்கா! சும்மாத்தான (இணையத்) திண்ணயில் கெடந்துக்கிட்டு புரளுதியோ. பக்கத்து காட்டுல போய் குரங்கு புடிச்சிட்டு வாங்கடே! ஒரு குரங்குக்கு 100 ரூபா மேனிக்கு தாரேன்"ன்னு சொல்லியிருக்காரு. சும்மா கெடக்குததுக்கு குரங்கையாவது புடிச்சிட்டு வர வேண்டியதுதானவே'ன்னு அவனவனுக்கு பொண்டாட்டிமாருவோ கிட்டயிருந்து ஒரே அர்ச்சனை.

'தக்காளி யாவாரி நம்ம பொழப்பக் கெடுத்தானே'ன்னு புலம்பிக்கிட்டே ப்யபுள்ளைலுவ எல்லாம் காட்டுக்குள்ள போயிருக்கானுவோ. நூறு ரூவா துட்டு கெடைக்குன்னதும் பயலுவ கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு குரங்கைப் புடிக்க ஆரம்பிச்சுட்டானுவோ. அவ்வளவுதான் ஆளாளுக்கு குரங்கப் புடிச்சிட்டு வர்றதும் காசு வாங்குறதுமா கொஞ்ச நாள் போனதும் குரங்குங்க எல்லாம் சுதாரிச்சுக்கிட்டுது.

இப்ப காட்டுக்குள்ள போனா குரங்கைப் புடிக்க குரங்குபாடா இருக்கு. 'சரிதான் போடே!'ன்னு நம்மாளுவ எல்லாம் பழயபடியும் (இ-கலைப்பையால)தாயக்கட்டையை எடுத்துட்டு உருட்ட ஆரம்பிச்சுட்டானுவோ.வியாபாரி பார்த்தான். இந்தக் கதை வெளங்காதேன்னு 'சரிடே! குரங்கப் புடிச்சா 200 ரூவா தரேன்"னு வெலயக் கூட்டிட்டான்.

காட்டுக்குள்ள இருக்குற குரங்கைத் தேடி போகலேன்னா வீட்டுக்குள்ள இருக்குற குரங்குத்தொல்லை தாங்க முடியாதேன்னு பழயபடியும் காட்டுக்குள்ள போயி குரங்கைப் புடிக்க ஆரம்பிச்சானுங்க குரங்குப் பயலுவ. அதுவும் எத்தனை நாளைக்கு தாங்கும்? குரங்கெல்லாம் கண்காணாம ஓடிப்போயிடுச்சு.


இந்த நெலைமைல யாவாரிக்கு யாவாரம் படுத்துடுமோன்னு கவலை வந்துடுச்சு. யாவாரி மக்களை எல்லாம் கூப்பிட்டான். "இந்தா பாருங்கடே! என்ன பண்ணுவியளோ தெரியாது. ஒரு குரங்குக்கு 500 ரூவா தரேன். நான் ஊருக்கு ஒரு சோலியா போவ வேண்டியிருக்கு. ஆனா என் ஆளை இங்கன விட்டுட்டு போறேன். அவன் கிட்ட குரங்கைக் கொடுத்துட்டு துட்டை வாங்குங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.

இப்ப தூங்குமூஞ்சிப் பயலுவளுக்கே காசு மேல காதல் வந்துடுச்சு. 'எலே!500 ரூவால்லா குடுக்காவளாம்'ன்னு ஊரு்க்குள்ளே ஒரே பேச்சா போச்சு. ஆளாளுக்கு கோமணத்தை வரிஞ்சு கட்டிக்கிட்டு காட்டுக்குள்ள குரங்கைத் தேடி அலைஞ்சிருக்கானுவோ. குரங்கு எல்லாம் தெளிஞ்சுட்டதால ஒண்ணையும் புடிக்க முடியலை.

எல்லாரும் சோர்ந்து போயிட்டானுவோ. 'ஒரு குரங்கைக் கூட புடிக்க துப்பில்ல உமக்கு'ன்னு பொண்டாட்டிக்காரிய எல்லாம் புருசனுங்களை வசை பாட 'ஏன் உன்னைப் புடிச்சிட்டு வரலியா'ன்னு அவனவன் வாய்க்குள்ளாற முணுமுணுத்துட்டுக் கெடந்திருக்கானுவ.வாயை விட்டுச் சொல்ல முடியுமா என்ன?

அப்பப் பார்த்து அந்த யாவாரி விட்டுட்டு போன ஆளு வந்து கிராமத்துல எல்லாரையும் கூப்பிட்டான். "இந்தப் பாருங்கடே! நான் உங்களுக்கு ஒரு உதவி பண்ணுதேன். எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் வேணும். அதனால நான் உங்க்ளுக்கு இந்தக் குரங்கை எல்லாம் 350 ரூவாய்க்கு தரேன். ரெண்டு நாளைக்குள்ள யாவரி வந்துடுவான். அவன் ஊர்லருந்து வந்ததும் அவன் கிட்ட 500 ரூவாய்க்கு குரங்கை வித்துடுங்க'ன்னு சொன்னதும் அவனவன் பொண்டாட்டியைத் தவிர மத்ததெல்லாம் அடகு வச்சோ வித்தோ (மத்ததை எவனும் வாங்கலியாம் சாமி!!) ஆளாளுக்கு 5 குரங்கு ஆறு குரங்குன்னு போட்டி போட்டுட்டு வாங்கியிருக்கானுவோ. கண்ணு மூடி முழிக்குறதுக்குள்ள எல்லாக் குரங்கும் வித்துப் போச்சு.

எல்லாம் யாவாரி வர்றதுக்காகக் காத்திருந்தாங்க. குரங்கு ஒண்ணுக்கு 150 ரூவா மேனிக்கு லாபம்லா கெடைக்குன்னு. ஆனா அடுத்த நாளும் அடுத்த வாரமும் அடுத்த வருசமும் யாவாரியும் சரி அவன் கூட்டாளியும் சரி வரவேயில்ல. தெண்டத்துக்கு ஆளுக்கு 5 குரங்கை வீட்டுல கட்டிப்போட்டிருக்கானுங்க நம்ம ஊர்க்காரப் பயலுவ.ஒரு குரங்கு மட்டும் இவனுவளை திட்டிக்கிட்டே திரியுதாம். ஆக, காசுக்கு ஆசைப்பட்டு கொரங்கு கெடச்சதுதான் மிச்சம்.

கதை சொல்ற நீதி என்னன்னா, பேராசை பெரு நட்டம்னுதான் நீங்க நெனப்பீங்க. அப்படியில்லீங்க அண்ணாச்சி,

பங்கு வணிக உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

புகைப்படம் எடுக்கும்போது சிரிப்பது முக்கியம் என்பதை காட்டும் புகைப்படம்


புகைப்படம் எடுக்கும்போது சிரிப்பது முக்கியம் என்பதை காட்டும் புகைப்படம்