Wednesday, February 27, 2008

நம்ப முடியல்ல

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தோன்றிய சித்தர் ஒருவர், தரையில் இருந்து வானத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்து சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் குறிப்பிடத்தக்கது. பஞ்சபூத சிவஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் இங்கு ஏராளமான சித்தர்களும், யோகிகளும் இன்னமும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மின் ஊழியர் ஒருவர் கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சித்தர் ஒருவரை கண்டார். ஜடாமுடியுடன் காட்சியளித்த அந்தச் சித்தர் அந்தரத்தில் நடந்ததால் ஆச்சரியமடைந்த மின் ஊழியர், அந்தக் காட்சியை தனது செல்ஃபோனில் படம் பிடித்தார். திடீரென்று அந்த சித்தர் தரையில் இருந்து வானத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்துசென்று, மறைந்துபோனார்.
Chk this link
http://www.jayanews.in/detailpagenew.aspx?NEWS=c6416975-f487-4040-b2ca-462291496b9d

0 comments:

Post a Comment