என்னை கவிஞனாக்கிய பெருமை
உனக்குரியது
எனக்கான கவிதை நீ!
என்பதின் பெருமை
எனக்குரியது!..
Friday, May 22, 2009
நீ...
Thursday, May 21, 2009
காதல்.com
என் இதயக்காதல்
SERVER _ ஏ
உன் இனிய
CLIENT _ எழுதுவது
என் இனிய
OPERATING SYSTEM _மே
உன்னால் இயங்கும்
SYSTEM _எந்தன்
காதல் கஷ்டங்களை விளக்கும்
NOTEPAD... இது!
உன் முதற்பார்வையிலேயே என்னை
SCAN செய்தாய்...
ஆனால்
காதல் VIRUS
என்னைத்தாக்கிவிட்டது,,!
நொடிகளில் கண்களால்
COPY செய்தேன்
உன்னுருவத்தை..!
PASTE செய்தேன்
என் உள்ளத்தில்..!
என் இதய DESKTOP_ல்
உன் முகம்தான்
இப்போது WALLPAPER..!
என் நினைவு
SCREEN SAVER_ல்
உன் பெயர் மட்டுமே
MARQUEE DISPLAY ஆகிறது...
என் ஞாபக FOLDER _ களில்
உன் நினைவு FILE _ கள்
மட்டுமே SAVE ஆகிறது
உன் ஒவ்வொரு
பார்வையிலும்
REFRESH ஆகும்
என் மனம் _ நீ
பார்க்காத நேரங்களில்
ALT+CTRL+DEL _ ஐ
நாடுகிறதே?!
உன் ஒவ்வொரு
அசைவும் GIF!
உன் ஒவ்வொரு
சொல்லும் MP3!
உன் ஒவ்வொரு
தோற்றமும் JPEG!
மொத்தத்தில் நீ
என் காதலின்
IP_ADDRESS..!
நம் இதய
NETWORK-ல்
LOGIN மட்டுமே உண்டு
நம் காதலுக்கு
என்றும் கிடையாது
SHUTDOWN...
Monday, May 11, 2009
மருதாணி
நேற்று நீ உறங்குகையில்
உன் கையில் மருதாணி
வைத்து விட்டேன் - உன்
நிறத்திற்கு மருதாணி சிவக்க வில்லைதான் - ஆனால்
அதை நீ அழிக்காமால் பாதுகாக்க
அரை நொடிகூட
தூங்காமல் இருந்தேன்
" அட என் கண்ணு -
நல்ல சிவந்து இருக்கே! "
Thursday, December 11, 2008
எனக்குக் காற்றும் - காதலும்
எனக்குக் காற்றும் - காதலும்
ஓன்றுதான்!
மலரோடு பேசும் தென்றலாய்...
நேற்றுவரை நம் காதல்!
சுவாசிக்க முடிந்தது!
மழையோடு வீசும் புயலாய்...
நீ பேசிய வார்த்தைகள்!
சுவாசிக்க முடியுமா புயலை...!
மூச்சை நிறுத்திக் கொள்ளலாம்...
அதற்காகக் காற்று நிற்காது...
என் காதல் போல்!
முடிந்தால் வாழ்ந்து கொள்...
என் "ஞாபக நொடிகள்"
இல்லாத நிமிடங்களோடு!
காதலைச் சொல்லவும்
காதலைக் கொல்லவும்
போதும் மூன்று வார்த்தைகள்!
உன் வார்த்தைகளால்
வடுக்களைத்தான் தரமுடியும்...
என்னிடமிருந்து உன் காதலைத்
திரும்பப் பெறமுடியாது...!
ஆ.............. கவிதை தொகுப்பில் சுட்டது
Monday, December 08, 2008
நட்பு
புரியாத நட்புக்கு
அருகில் இருந்தும்
பயனில்லை!
புரிந்து கொண்ட நட்புக்கு
பிரிவு ஓரு தூரமில்லை
