Wednesday, July 18, 2007

பயங்கரமாக யோசிப்போர் சங்கம்

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை .

************ ********* ********* ********* ********* *

சொன்னார்கள்

“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி .”

- ஜவஹர்லால் நேரு .

” நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”

************ ********* ********* ********* **

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன் . இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

************ ********* ********* *

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா !! பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது .

வடிவேல் : ?!?!

************ ********* ********* ******

அண்ணே …

விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .

ஆனா,

கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?

************ ********* ********* ********* ***

நாம 21ஐ ” டுவென்டி ஒன் ” னு சொல்றோம் .

31ஐ ” தேர்ட்டி ஒன் “னு சொல்றோம் .

41ஐ “ஃபார்டி ஒன் “னு சொல்றோம் .

அப்ப ஏன்,

11 ஐ மட்டும் “ஒன்ட்டி ஒன் ” னு சொல்லக் கூடாது ?

************ ********* ********* ********* *****

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?

ஆசிரியர் : ?!?!

இப்படிக்கு ,

ரூம் போட்டு , மல்லாக்கப் படுத்து , பயங்கரமாக யோசிப்போர் சங்கம்

Courtesy: http://priyatamil.wordpress.com

0 comments:

Post a Comment